WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 31, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 107 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டம்!!?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 107 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2013 ஜூலை 1ம் தேதி முதல் 2014 ஜூன் 30ம் தேதி வரையில் தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அகவிலைப்படியை உயர்த்துவதற்கான பரிந்துரையை நிதித்துறை அமைச்சகம் விரைவில் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது.

ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்தியது. ஜனவரியில் அகவிலைப்படி 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.