WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 20, 2014

பார்வையற்றோருக்கான ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசுக்கு கோரிக்கை

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்க பொது செயலாளர் பி.சுந்தரேசன் நேற்று அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த மே 21ம் தேதி நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொண்ட பார்வையற்றவர்களை கொண்டு பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

குறிப்பாக தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்து தேர்வுகளில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொண்ட பார்வையற்றவர்களை கொண்டு 94 பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட்ட துறை பள்ளிகள் (கள்ளர்), ஆதிதிராவிட நலப்பள்ளிகள், வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், மின்வாரிய பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களிலும் பார்வையற்றவர் களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.