WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 1, 2014

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை 


இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஆன்லைனில் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. 
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு நாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்
9 மாவட்டங்களில் காலியிடம் இல்லை 

ஆசிரியர் தேர்வு வாரியத் தால் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் டிஆர்பி தெரிவுக்கடிதம் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். 

சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, பெரம் பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லாத தால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று (திங்கள்கிழமை) கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங் களுக்காக நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

8 comments:

  1. REQUEST TO UNMARRIED TET

    SELECTED WOMEN !!

    1). PLEASE MARRY A MAN WHO HAS

    MISSED JOB IN THIS TET EXAM !!

    2). PLEASE MARRY A MAN WHO HAS

    NO JOB.

    3). PLEASE MARRY A MAN WHO

    PREPARES FOR COMPETITIVE EXAMS.

    4). EMPLOYED WOMAN SHOULD

    MARRY UNEMPLOYED MAN TO

    REDUCE UNEMPLOYMENT.

    ReplyDelete
  2. EP selva and bharathi sir heartly congrats..plz clarify my doubt? i want know absenties in counseling..subject wise..2nd list possible or not?

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வம் சார்...
      கலந்தாய்வில் வராதவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அடுத்த முதுகலை ஆசிரியர் தேர்வு இந்த வருட இறுதிக்குள் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். இரண்டாவது பட்டியல் வெளியிட்டால் நானும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

      Delete
  3. PLZ kalvikuil admin update 2nd day counselling news..totaly hw many candidates absent in counselling? 2nd possible or not?

    ReplyDelete
  4. Naadagam vidum neram dhan
    Ucha kaatchi nadakudhama
    Vesam kalaikavum Oivu edukavum
    Velai nerungudhamma
    Paadhaigal pala maariye vandha
    Payanam mudiyudhamma
    Thaai kondu vandhadhai thaalati
    Vaithadhai noi(Rajalingam) kondu
    Pogum neramammaaaaaa,,,,,
    Advanced HAPPY GURU UTSAV 2014..... for all selected teachers

    ReplyDelete
  5. Flash news:
    Arasukedhiraga porada thoondiyadhu &
    5 berai tharkolaiku thoondiadhu
    Tet yeludhamal poradiyadhu
    Pondra kutrangalukaga
    Rajalingam puliangudiyil kaidhu

    ReplyDelete
  6. போராட்டத்தின் போது

    விசம் எப்படி வந்தது. ???

    முன்கூட்டியே RAJALINGAM

    ஏற்பாடு செய்தாரா ??

    விசாரணை கமிஷன் தேவை.

    ReplyDelete
  7. Happy GURU UTSAV
    Nalai pani niyamana anai peravirukkum anaithu pattadhari asiriyar galukku vaazhthukkal.
    போராட்டம் என்ற போர்வையில் தேவையில்லாமல் மற்றவர்கள்(விசம் குடித்த நபர்கள்) பாதிக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம்?

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்க்கு போராட்டத்தை தூண்டுபவர்களே உங்களின் தீர்வுதான் என்ன?

    சுயநலத்திற்காக மற்றவர்களை பலிகடாவாக ஆக்குவது தான் உங்களின் அமைதியான பேரணியா?

    போதும் இந்த முறை தேர்வாகவில்லை எனில் அடுத்தமுறை நிச்சயம் உங்களுக்கான தேர்வாக இருக்கும் ஆனால் வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே ஒரு முறை சென்றால் மறுமுறை வருவதில்லை.....

    உனர்ந்து செயல்படுங்கள் நண்பர்களே....

    விடாமுயர்சி
    கடின உழைப்பு
    வெற்றி நிச்சயம்......

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.