WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 10, 2015

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு

சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைக்கடிகாரம் ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.