WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 13, 2015

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களிலும் கிரேடு முறையை அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய கிரேடு முறை

அதன்படி கிரேடு ஓ. முதல் கிரேடு பி வரை அமல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கிரேடு ஓ- மதிப்பெண் 90.1 முதல் 100 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு ஏ பிளஸ் என்பது எக்ஸலன்ட். இது 80.1 முதல் 90 வரை உள்ள மதிப்பெண் ஆகும். அதைத்தொடர்ந்து கிரேடு ஏ- மிகவும் நல்ல மதிப்பெண் அதாவது 70.1 முதல் 80 மதிப்பெண் வரை ஆகும்.

கிரேடு பி பிளஸ் என்பது நல்ல மதிப்பெண் அதாவது 60.1 முதல் 70 மதிப்பெண் வரை ஆகும். பி கிரேடு என்றால் சராசரி மதிப்பெண்ணுக்கு அதிகமாக அதாவது 50.1 மதிப்பெண் முதல் 60 மதிப்பெண்வரை. கிரேடு சி என்பது சராசரி மதிப்பெண் அதாவது 50 முதல் 55 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு பாஸ் என்பது: தேர்ச்சி மதிப்பெண் கொண்டது. அதாவது 40 மதிப்பெண முதல் 50 மதிப்பெண் வரை உள்ளது ஆகும்.
இவ்வாறு கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.