தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
மறுகூட்டல், விடைத்தாளின் நகல்கள் பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.