WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2015

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்! : புதிய திட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்பு

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, மாநில அளவில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பள்ளிகள் வாயிலாக, நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. முதன்முறை செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், உயர்கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் கல்லுாரிகள் தேர்வு செய்வதில் எவ்வித சிக்கல்களும், தாமதமும் எழாத வகையில், முதல் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், காலை, 9:30 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி நடந்தது. இத்துடன், மாணவர்களின், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களையும் வழங்க அரசுத்தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதல் முறையாக வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், மாணவரின் புகைப்படம், மதிப்பெண் விபரம், பயிற்று மொழி, பிறந்த தேதி, பதிவு எண், பாட தொகுப்பு எண், பள்ளியின் பெயர், தேர்வு முடிவுகள் வெளியானது முதல் எத்தனை நாட்கள் செல்லும் என்ற விபரங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், உடனடியாக தலைமையாசிரியரே பிழைகளில் திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு வழங்கவும், அப்பிழைகள் குறித்து அரசு தேர்வுத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அசல் மதிப்பெண் பட்டியலில், 100 சதவீத பிழைகள் தவிர்க்கப்படும்.

அரசு பள்ளி தலைமையாசிரியை சந்திரசேகர் கூறுகையில்,''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திட்டம் நல்ல முயற்சி. உயர்கல்வியில் மாணவர்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் சேரலாம். அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.