ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும் என
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழகம் வலியுறுத்தி உள்ளது.தேனி மாவட்ட தலைவர் சின்னராஜா கூறியதாவது: ஜூன் ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மே மாதம் கவுன்சிலிங் நடத்தப்படவேண்டும். கவுன்சிலிங் ஒளிவுமறைவின்றி நடத்தப்பட வேண்டும். அதேபோல் உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் விபரத்தையும் மே மாதமே அறிவிக்கவேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு சிரமம் குறையும். கூடுதல் வசதிகள் கிடைக்கும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.