WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 14, 2015

பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாதிக்கப்படுமா?

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுவதால், காலாண்டு தேர்வுக்கு,
மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் - எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; வேலை நாட்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.  இது தொடர்பாக, சில ஆசிரியர் கூட்டணி சங்கங்கள், மாநில தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:எஸ்.எஸ்.ஏ., சார்பில், கடந்த மாதமும், இம்மாதமும், தலா, ஆறு நாட்கள் ஆங்கிலப் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த, 9ம் தேதி துவங்கி, மூன்று கட்டங்களாக, கணிதப் பயிற்சி வழங்கப்படுகிறது.காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ள நாட்களில், அறிவியல், ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும், கட்டாயம் ஒரு ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என்ற சூழலில், நீலகிரி உட்பட பல மாவட்டங்களில், ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.