WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 14, 2015

1,863 பதவிகளுக்கு டிச.,27ல் தேர்வு

அரசு துறைகளில், குரூப்-2 ஏ பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10க்கும் மேற்பட்ட துறைகளில், 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு நடக்கும். தேர்வு எழுத விரும்புவோர், ஆன்லைன் மூலம் மட்டுமே, நவ., 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13க்குள் செலுத்தலாம். தமிழகம் முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும். பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை, http://www.tnpscexams.net/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.