WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 23, 2016

பிட்' அடித்த தனித்தேர்வர்கள்கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றம்.


தேனியில் 8ம் வகுப்பு தேர்வில் தனித்தேர்வர்கள் 'பிட்' அடிக்க அனுமதித்த சம்பவத்தை தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றப்பட்டனர்.
தேனியில் அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று முன்தினம் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு கணித தேர்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் முன்கூட்டியே தேர்வு மைய பொறுப்பாளர், அறை கண்காணிப்பாளர்களை 'கவனித்தனர்'. இதனால் வினாத்தாளுடன் அதற்கான விடைகளின் நகலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் 'பிட்' அடிக்க கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் இப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று நடந்த அறிவியல் தேர்வை 243 பேர் எழுதினர். 140 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், “ கணிதத் தேர்வில் தனித்தேர்வர்கள்' பிட்' அடிக்க அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளனர். இதுவே இவர்களுக்கு தண்டனை. தேர்வு முடிந்த பின் விரிவான விசாரணை நடத்தப்படும். இதில் கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்தனரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.