அண்ணாமலை பல்கலையின், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட, 1,421 பேர்,
வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.சிதம்பரம் அண்ணாமலை அரசு பல்கலை யில், நிதி பற்றாக்குறை இருப்பதால், உபரியாக இருக்கும் ஆசிரியர்களும், ஊழியர்களும், மற்ற பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு மாற்றப்படுகின்றனர்.முதல்கட்டமாக, 2016 பிப்ரவரியில், 369 உதவி பேராசிரியர்களும், இரண்டாம் கட்டமாக, மே, 11ல், அலுவலகஉதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், காவலர் கள் என, 257 பேரும், மே, 12ல், 69 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மூன்றாம் கட்டமாக, நேற்று முன்தினம் ஒரே நாளில், 512 ஆசிரியர்கள், 909 ஊழியர்கள் என, 1,421 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, சேலம், ஓசூர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, 881 ஆசிரியர்கள் உட்பட, 2,119 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 3,000 பேர், இடமாறுதல் பட்டியலில் உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.