இலக்கண பிழைகளை திருத்தும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற, தமிழ்
சாப்ட்வேர், 'சிடி'யை, முதல்வர்பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில், பிழை திருத்த, சொல் திருத்த வசதி உள்ளது. அதேபோல், தமிழில், ஒற்றுப்பிழை, சந்தி உள்ளிட்ட இலக்கண பிழைகள் இல்லாமல் எழுதவும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளவும், எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளவும், 'அம்மா மென்தமிழ் சொல்லாளர்' என்ற பெயரில், புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விலை, 300 ரூபாய். இது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர், 'சிடி'யை, நேற்று,தலைமைச்செயலகத் தில், முதல்வர் பழனிசாமி வெளியிட, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.