மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், வேளாண் படிப்புகளுக்கு, நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கோவை, வேளாண்
பல்கலையில், 12ல், வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. கடந்த நான்கு நாட்களில், 12 ஆயிரத்து, 487 மாணவியர், 9,238 மாணவர்கள், ஒரு திருநங்கை என, 21 ஆயிரத்து, 726 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்தாண்டு, வேளாண் படிப்புக்கு, மொத்தமாக, 36 ஆயிரத்து, 322 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் நாட்களில், எண்ணிக்கைஅதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறுகையில், ''மாணவர்கள், பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள ஆர்வமே இதற்கு காரணம். நடப்பாண்டு, 60 ஆயிரம் பேர் வரை, விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.