WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 19, 2017

7-வது ஊதியக்குழு குறித்து கருத்தறியும் கூட்டம்: 4 நாட்கள் நடக்கிறது.

தமிழக அரசு சார்பில் 7 வது ஊதியக்குழு தொடர்பாக ஊழி யர்கள் சங்கங்களின் கருத்தறியும் கூட்டம் நான்கு நாட்கள் நடக்க உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 7-வது ஊதியக் குழு பரிந்துரை களை தமிழக அரசு ஊழியர் களுக்கும் வழங்குவது தொடர் பாக அலுவலர் குழு அமைக் கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் க.சண்முகம் தலைமை யிலான இக்குழு, வரும் 26, 27 மற்றும் மே 2,3 ஆகிய தேதிகளில் நான்கு நாட்களில் அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், கருத்துகளை கேட்க முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், கருத்தறியும் கூட்டத்தை நடத்த நான்கு நாட்கள் போதாது என அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகி கூறும்போது, ‘‘200க்கும் மேற் பட்ட ஊழியர் சங்கங்கள் உள்ள நிலையில், 4 நாட்கள் என்பது போதாது. கருத்தறியும் கூட்டத்தை இன்னும் சில நாட்கள் நீட்டித்தால், சங்கங்களின் நிர்வாகிகளை முழுமையாக சந்தித்து, கருத்துகளைப் பெற முடியும்’’ என்றார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.