WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 20, 2017

மின் வாரிய 'டைப்பிஸ்ட்' தேர்வு முடிவு வெளியீடு.

மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வான நபர்களின் பட்டியலை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 200 டைப்பிஸ்ட் காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, ஏப்ரலில் நேர்காணல் நடந்தது. இதையடுத்து, எழுத்து மற்றும் நேர்காணலில் அதிக மதிப்பெண் எடுத்து, வேலைக்கு தேர்வாகி உள்ள, 200 நபர்களின் பட்டியலை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 200 நபர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடுத்ததாக, 10 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தேர்வானோர், குறிப்பிட்ட காலத்துக்குள் வேலையில் சேராவிட்டால், காத்திருப்பு பட்டியலில் உள்ள நபர்களுக்கு, வரிசைப்படி வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.