கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகமாக நிலவுகிறது. ஒவ்வொரு நாளுமே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் என பல்வேறு சீர்திருத்தங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அப்போது பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும்" என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.