தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் கல்வி நிறுவன வளாகங்களில், அதிக கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. 2007 ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது, நகர், ஊரமைப்புத் துறை நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் கல்லுாரிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலின் போது, அந்த வளாகங்களில் உள்ள கட்டடங்கள் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டுமான திட்ட அனுமதிக்கு வரும் கல்லுாரி களின் கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால், நோட்டீஸ் கொடுத்து, 'சீல்' வைக்கலாம்; இடிக்கலாம். உள்ளூர் திட்ட குழுமங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 1973 பொது கட்டடங்களுக்கான விதிகள், 1997 தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகள் ஆகியவற்றின்படி, நடவடிக்கை எடுக்கலாம். விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; விரைவில், அதிரடி நடவடிக்கை துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.