WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 14, 2017

பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு.

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பிளஸ் 1 தேர்வை பொறுத்த வரை, மாணவர்களுக்கு சிலசந்தேகங்கள் இருக்கும். இரண்டரை மணி நேரம் தேர்வு எழுவதற்கு ஏற்ப, வினாத்தாள் தயாரித்து இருக்கிறோம். இதற்காக வழங்கப்படும் வினாத்தாள்களை கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். இதன் மூலம் பிளஸ் 1 மாணவர்கள் அனைவருமே, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.