பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டப்படி, பிளஸ் 1க்கு இதுவரை, மாவட்ட அளவில், இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
தனியார் பள்ளிகள், தாங்களே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தின.
பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல், மாணவர்கள், பிளஸ் 2வுக்கு தேர்ச்சி செய்யப்பட்டனர்.
எனவே, பிளஸ் 1 அடிப்படை பாடம் தெரியாத மாணவர்கள், தேசிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை.
இதையடுத்து, அனைத்து வித நுழைவுத் தேர்வுகளையும், தமிழக மாணவர்கள் எதிர்கொண்டு தேர்ச்சி பெறும் வகையில், பிளஸ் 1 பாடத்தை தவறாமல் நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், முறைகேடு நடக்காமல் தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வை, தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஆறு பாடங்களுக்கு, தலா, 100 வீதம், மொத்தம், 600 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், செய்முறை தேர்வு உள்ள எழுத்து தேர்வில் குறைந்த பட்சம், 15 மதிப்பெண்களும், அகமதிப்பீடு மற்றும் செய்முறையில், 35 மதிப்பெண் பெற வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.
தொழிற்கல்வி, செய்முறை அல்லாத பாடங்களுக்கும், மதிப்பெண் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விதிப்படி, வினாத்தாள் அமையும் விதம், பாட வாரியான மதிப்பெண் போன்ற விபரங்களை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாதிரி தேர்வு வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.