WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 3, 2017

பிளஸ் 1 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு.

பிளஸ் 1 அரசு பொது தேர்விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பாட ஆசிரியர்களிடம் கல்வித்துறை ஒப்புதல் கோரியுள்ளனர். 


இந்தாண்டு முதல் பிளஸ் 1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக மாற்றியுள்ளது. புதிய பாடத்திட்டம் மூலம் பிளஸ் 1 தேர்வில், ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் வீதம் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவார்கள். இதில் பாடத்திற்கு 90 மதிப்பெண் தேர்வு எழுத வேண்டும். 10 மதிப்பெண் வகுப்பறை தேர்வாக நிர்ணயிக்கப்படும்.


செய்முறை தேர்வு பாடங்களில் எழுத்து தேர்வு 70 மதிப்பெண்ணும், 20 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும். 10 மதிப்பெண் வகுப்பறை மதிப்பெண்ணாக வழங்கப்படும். 


செய்முறை தேர்வு இல்லாத பாடங்கள்: 


செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு, கொள்குறி வினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 20 கேள்விகள். குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 7 கேள்விகள். 


சிறு வினாக்கள் ஒன்றுக்கு 3 மதிப்பெண் வீதம் ஏழு கேள்விகள். பெரு வினாக்கள் ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண் வீதம் 7 கேள்விகள் என மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.


செய்முறை தேர்வு பாடங்கள்: 


செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் கொள்குறி வகை வினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 15 கேள்விகள். குறுவினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 6 கேள்விகள். சிறுவினாக்களுக்கு 3 மதிப்பெண் வீதம் 6 கேள்விகள், பெரு வினாவிற்கு 5 மதிப்பெண் வீதம் 5 கேள்விகள் என மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்படும்.


உயிரியல் பாடம்: உயிர் -தாவரவியல், உயிர் - விலங்கியல் பாடத்தில் கொள்குறிவினா ஒன்றிற்கு ஒரு மதிப்பெண் வீதம் 8 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 2 மதிப்பெண் வீதம் 6 வினாக்கள், பெரு வினாக்களுக்கு 5 மதிப்பெண் வீதம் 3 வினாக்கள் கேட்கப்படும். இதில் உயிர்தாவரவியல் பாடத்தில் 35 மதிப்பபெண், உயிர் விலங்கியல் பாடத்தில் 35 மதிப்பெண் வீதம் வழங்கப்படும்.


ஆசிரியர் கருத்து கேட்பு: 


தற்போது தயாரிக்கப்பட்டும் மாதிரி வினாத்தாள் பாட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் ஒப்புதலை பொருத்து மாதிரி வினாத்தாள் பொதுத்தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.