WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 28, 2017

தற்காலிக பேராசிரியர் நியமனம் பாரதியார் பல்கலையில் எதிர்ப்பு : * யு.ஜி.சி., விதிமுறை பின்பற்ற வலியுறுத்தல்.

பாரதியார் பல்கலையில் தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு பதிலாக, யு.ஜி.சி., விதிமுறைப்படி நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையின் வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு, தற்காலிக பேராசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல், சமீபத்தில் நடந்தது. இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள், 2017 - 18ம் கல்வியாண்டு வரை அல்லது நிரந்தர பேராசிரியர்கள் தேர்வு செய்யும் வரை பணிபுரிய உள்ளனர். 

யு.ஜி.சி., விதி : இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலை பேராசிரியர்கள், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., விதிமுறைப்படி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் கூறியதாவது: வரலாறு மற்றும் சுற்றுலா துறை துவங்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாகியும், இதுவரை ஒருவர் மட்டுமே நிரந்தர பேராசிரியராக உள்ளார்; மற்றவர்கள் தற்காலிக பேராசிரியர்கள். யு.ஜி.சி., விதிமுறைப்படி ஒரு துறைக்கு, ஆறு நிரந்தர பேராசிரியர்கள் இருக்க வேண்டும். மற்ற துறைகளில் இந்நடைமுறை உள்ளபோது, வரலாறு மற்றும் சுற்றுலா துறைக்கு மட்டும் தற்காலிக பேராசிரியர்களாகவே உள்ளனர்.
மேலும், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரியர்களை, இங்கு பணியமர்த்தும் நோக்கில், நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. 

காலி பணியிடம் : ஏற்கனவே, அரசுக் கல்லுாரிகளில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர் களை நியமிப்பதற்கு, எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே, பாரதியார் பல்கலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
    2013 ஆசிரியர் தகுதி தேர

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.