WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 20, 2017

32 மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ கூட்டம்.

தமிழக அரசின் ஊதிய உயர்வு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில், இன்று தமிழகம் முழுவதும், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விளக்க கூட்டம் நடக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு கேட்டு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு நடத்திய காலவரையற்ற ஸ்டிரைக்கால், தமிழக பள்ளி - கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசின் சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, ஆசிரியர், அரசு ஊழியர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 2016 ஜன., முதல், அரசு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், தமிழக அரசு நீக்கவில்லை என, ஜாக்டோ - ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவின் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் கூடி, ஆலோசனை நடத்தியது. இதன்படி, முதற்கட்டமாக, நாளை, 32 மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. ’ஊதிய உயர்வு ஏமாற்றம்’ என்ற தலைப்பில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

”இதையடுத்து, நீதிமன்றத்தில் ஊதிய உயர்வின் குளறுபடிகள் மற்றும் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை குறித்து முறையிடப்படும். அதன் பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்.

2 comments:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    வடிவேல் சுந்தர்80122776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 950095482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    ReplyDelete
  2. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    வடிவேல் சுந்தர்80122776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 950095482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
    கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
    https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.