WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 20, 2017

பள்ளிகள் இன்று திறப்பு : பாடம் நடப்பது, 'டவுட்'.

தீபாவளி விடுமுறையை சரிகட்ட, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நேற்றும், நேற்று முன்தினமும், பள்ளி, கல்லுாரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளியை கொண்டாட, வெளியூர்களுக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள் பலர், இன்னும் ஊர் திரும்பவில்லை. அதனால், இன்று பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், நாளையும், நாளை மறுநாளும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான ஆசிரியர்கள், இன்று விடுப்பு போட்டுள்ளனர். எனவே, அந்த ஆசிரியர்கள், விடுபட்ட பாடங்களை நடத்த வசதியாக, அடுத்து வாரம் முதல், சனிக்கிழமைகளில், கூடுதல் வகுப்புகள் நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 comment:

  1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    வடிவேல் சுந்தர்80122776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 950095482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.