WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 29, 2017

அரசு கலைக் கல்லூரிகளில் 2015 ல் செட் நெட் முடிக்காமல் பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கு சிக்கல்

தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரியில் 1070 உதவி  பேராசிரியர்களுக்கான  அறிவிப்பு 2013 ல் வெளியிடப்பட்டு 2015 ல்
பணி நியமனம் நடந்தது. இந்த பணி நியமனத்தில் செட் நெட் முடிக்காமல் வெறும் பி.எச்டி கல்வி தகுதியுடன் மட்டும் பணியில்  சேர்ந்தவர்களுக்கு ( 2009 ரெகுலேசன் படி பி.எச்டி பட்டம் பெறாமல்  )  சேர்ந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்   தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் 8-11-2017 ல் வழங்கிய தீர்ப்பு அமைந்துள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு RTI பதில்களை யுஜிசி தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கல்லூரி கல்வி இயக்குனரின் RTI பதில்கள் , TRB செயலாளரின் பதில்கள் மற்றும் ஏற்கனவே பல்வேறு பல்கலை கழகத்தில் இருந்து 2009 ரெகுலேசன் பி.எச்டி சம்பந்தமாக அளிக்கப் பட்ட தீர்ப்புக்களால் தமிழக உயர்கல்வி துறையில் சிக்கல் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பல்கலை கழகமும் 2009 ரெகுலேசன் பி.எச்டி பட்டபடிப்பை எந்த ஆண்டு அமல் படுத்தி வழங்கியுள்ளது என பெறப்பட்ட RTI பதில்களால் TRB சிக்கலிலும், அரசு  கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் காலி பணியிட அறிவிப்பினை வெளியிடுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. 
மேலும் 2009 Regulation படி பி.எச்டி பட்டம் பெறாமல் குறிப்பிட்ட பல்கலை கழகங்களில் அந்த Regulations ஐ அமல்படுத்துவதற்கு முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் செட் அல்லது நெட் தேர்ச்சி அவசியம் என 16.3.2015 சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. K. செல்வராஜ் என்ற வழக்கறிஞர் RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி  தமிழகத்தில் 2009 Regulation பி.எச்டி யை சென்னை பல்கலை கழகம் 1.7.2010 லும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 23.4.2013 லும் மனோன்மனியம் பல்கலைக்கழகம் 5.11.2009 லும் அழகப்பா பல்கலைக்கழகம் 3.11.2011லும் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஜீன் மாதம் 2009 லும் நடைமுறை படுத்தியுள்ளது.எனவே மேற்குறிப்பிட்ட தேதிக்கும் முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 2009 Regulations நடைமுறை படுத்துவதற்கு  முந்தைய தேதியில் பி.எச்டி பட்டம் பெற பதிவு செய்தவர்கள் கட்டாய செட் நெட் அவசியம் என UGC யும் உச்சநீதி மன்றமும் எச்சரித்துள்ளது.ஆனால் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள Teacher Recruitment board -ம் கடந்த முறை போல் உதவி பேராசிரியர் நியமனத்தை விதிகளை மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி தேர்வு செய்யும் முறை இல்லையெனில்  அரசு அதிகாரிகள்  உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் என தமிழக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

4 comments:

  1. நெட் முடித்து ஆறு வருடம் பனி அனுபவம் அதற்கு ஏதும் வாய்ப்பிருக்கிறதா ஐயா

    ReplyDelete
  2. Seniorty நல்லது

    ReplyDelete
  3. டி.ஆர்.பி எப்பொழுது வரும்

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.