தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 28ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் பணியில் விரல் ரேகைப் பணியிடங்களுக்கான காலியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை இணையத்தில் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 28ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2018 அக்டோபர் 13ம் தேதி இரவு 11.50 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி http://www.tnusrbonline.org/ ஆகும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.