தமிழகம் முழுவதும், நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க,
கல்வித் துறை அனுமதி
அளித்துள்ளது.சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை, 'அட்மிஷன்' என்ற,
சிறப்பு மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்துகின்றன.இந்த வகையில்,
இந்த ஆண்டும், விஜயதசமிக்கு மாணவர்களை சேர்க்க, அரசு மற்றும் தனியார்
பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுமதி அளித்துள்ளார்.
ஏற்கனவே, அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில்,
அக்., 31 வரை மாணவர்களை சேர்க்கவும், ஆசிரியர்களுக்கு அவர்
அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.