WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 8, 2018

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு.. கனமழை பெய்யலாம்..!


northeast-monsoon-begins-today



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





கன்னியாகுமரி‌ நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.மேலும், வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு அக்டோபர்‌ 12-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், தெற்கு மத்திய வங்க கடல், அந்தமான் கடல் பகுதிக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.