WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 4, 2018

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு!

 
 
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் விகிதத்திற்கு ஏற்ப ஆசிரியர்களைக் குறைக்க கல்வித் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு! மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களையும் குறைக்க உத்தரவு! தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர்களின் விகிதப்படி மாணவர் எண்ணிக்கையை விட அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அவ்வாறு உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு தேவைப்படும் பள்ளிகளில் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடிவதில்லை. ஆகவே, தேவைக்கும் அதிகமாக உள்ள ஆசிரியர்கள் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது அந்தப் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் பணியிடத்தில் புதிய ஆசிரியரை நியமிக்காமல் அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.