WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 4, 2018

சார்பு ஆய்வாளருக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!


தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 309 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முடிவுகள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் தகுதி மதிப்பெண்கள், அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், அசல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றில் தகுதிவாய்ந்தவர்களின் சேர்க்கை எண்கள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.