WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 23, 2019

தேசிய கீதமே தெரியாதா பாடநுால் கழகத்திற்கு?.

பாட புத்தகத்தில் தேசிய கீதத்தை தவறாக அச்சிட்ட பாடநுால் கழகம், நேற்று அனுப்பிய சுற்றறிக்கையிலும், தேசிய கீத வார்த்தைகளை, சொதப்பலாக அச்சிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட புத்தகத்தில், தேசிய கீதத்தை தவறாக அச்சிட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, பாடநுால் கழக மேலாண் இயக்குனர் ஜெயந்தி, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு, நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:ஒன்று, இரண்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகத்தில், தேசிய கீதத்தை தவறாக குறிப்பிட்டு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து, குறுந்தகடு பெறப்பட்டது.

அந்த பிழையுடன் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.அதை சரிசெய்து, திருத்திய நகல் இணைக்கப்பட்டுள்ளது. அதை மாவட்ட அதிகாரிகள் வழியாக, பாட புத்தகத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது..இந்த சுற்றறிக்கையில், தேசிய கீதத்தில், 10ம் வரியில், 'ஜன கண மங்கள தாயக ஜய ஹே' என்பதற்கு பதிலாக, 'ஜன கண மன அதி நாயக ஜய ஹே' என்ற, வரிகள் இடம் பெற்றுள்ளன.அதிலும், நாயக ஜயஹே என்பதை, 'நாயாக ஜய ஹே' என, தவறாக அச்சிட்டுள்ளனர். இதில், தவறான வார்த்தையை அடித்தல் செய்து, சுற்றறிக்கையை, கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.