WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 14, 2022

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6½ லட்சம் பேர் விண்ணப்பம்- ஜூலை மாதம் தேர்வு.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெட் தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதற்காக கடந்த மார்ச் 7-ந்தேதி விண்ணப்பம் கொடுக்க தொடங்கினார்கள்.

டெட் முதல் தாள், டெட் இரண்டாம் தாள் அனைத்துக்கும் சேர்த்து மொத்தம் 6½ லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

டெட் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

அதே போல் டெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.


கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019-க்கு பிறகு 3 ஆண்டாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.