மத்திய அரசி மாநில வாரியாக பள்ளி கல்வித்துறையை குறித்த ஆய்வினை நடத்தியுள்ளது. இதற்கான அறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் அதில் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கல்வி செயல்திறன்:
இந்திய அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை தீர்க்கமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் அளித்து வரும் நிலையில், மாநில அரசுகளையும் ஊக்குவித்து வருகிறது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மாணவர்களின் பள்ளி கல்வியானது வெறும் ஏட்டினில் மட்டும் இல்லாமல், அவர்களின் மனதிலும் பாதிப்பை நல்ல வகையில் ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் மாநில வாரியாக பள்ளிக்கல்வி செயல்திறன் குறித்த ஆய்வினை ஆண்டு தோறும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வி செயல்திறன் குறித்த மதிப்பெண் வாரியான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 1000 மதிப்பெண்களுக்கு தமிழகம் 885 மதிப்பெண்களை பெற்றுள்ளது. தரவரிசை பட்டியலில் தமிழகம் மூன்றாம் நிலையை அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் தமிழகம் 906 மதிப்பெண்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.