தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல இன்று சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையிலும் கனமழை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தஞ்சாவூர், கோயம்புத்தூர், கடலூர், மதுரை, திருப்பத்தூர், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, மீனவர்கள் இன்று எந்தவித இடையூறும் இல்லாமல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.