WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 31, 2026

பொதுத் தேர்வுக்கான முகப்புத்தாள் தைக்கும் பணி: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 

பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்​களுக்​கான முகப்​புத் தாள்​கள் தைக்​கும் பணி​கள் தொடர்​பான வழி​காட்​டு​தல்​களை தேர்வுத் துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்​களின் புகைப்​படம், பதிவெண் மற்​றும் பாடம் போன்ற விவரங்​கள் அடங்​கிய முகப்​புத்​தாளை (டாப் ஷீட்) முதன்மை விடைத்​தாளு​டன் சேர்த்​து, தேர்வுத் துறை அறி​வுறுத்​தலின்​படி தைக்​கும் பணி அந்​தந்த மாவட்​டங்​களில் நடை​பெறு​வது வழக்​கம்.

அந்த வகை​யில் நடப்​பாண்டு பொதுத் தேர்வு முகப்​புத்​தாள் தைக்​கும் பணி​களுக்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக தேர்வுத் துறை இயக்​குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: பொதுத் தேர்வுகளில் விடைத்​தாள் மதிப்​பீடு முறை​யில் ரகசி​யம் காக்​கும் வகை​யில் 2014-ம் ஆண்​டு​முதல் பார்​கோடுடன் கூடிய முகப்​புத் தாள்​களை விடைத்​தாள்​களு​டன் இணைத்து தைக்​கும் முறை செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

2024-25-ம் கல்​வி​யாண்டு முதல் மாவட்​டந்​தோறும் முகாம் அமைத்து அதில் முகப்​புத் தாள்​களை விடைத்​தாள்​களு​டன் சேர்த்து தைத்து தேர்வு மைய பள்​ளி​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

முகாம் கண்​காணிப்பு அலு​வலர்​களாக முதன்​மைக் கல்வி அலு​வலர் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலரும், ஒருங்​கிணைப்பு அலு​வலர்​களாக மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்​குநரும், முகாம் அலு​வல​ராக முகாம் நடை​பெறும் பள்​ளி​யின் தலைமை ஆசிரியரும் செயல்​படு​வர்.

முகப்​புத் தாள்தைக்​கும் பணியை முகாம் நடை​பெறும் நாட்​களில் முதன்​மை, மாவட்​டக் கல்வி அலு​வலர் ஒரு​நாள் விட்டு ஒரு ​நாள் ஆய்வு செய்ய வேண்​டும். விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​படும் முகப்​புத் தாள்​கள் அந்த பாடத்​துக்​குரியதா என்​பதை ஆய்வு செய்ய வேண்​டும்.

அந்த முகா​முக்​குள் வெளிநபர் யாரை​யும் அனு​ம​திக்​கக்​கூ​டாது. மையங்​களில் இருந்து முகப்​புத் தாள்​களு​டன் கூடிய விடைத்​தாள் கட்​டு​களை பெற்​றுச் சென்று தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் அதை பாது​காப்​பாக வைக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு வழி​காட்​டு​தல்​கள் அதில் இடம் பெற்​றுள்​ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.