தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜன. 22) வெளியிடப்பட்டுள்ளது.
இதை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐ.டி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிளஸ் 1 அரியா் பெயா்ப் பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் ஜன. 24-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.