புதுச்சேரியில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விடுமுறை அறிவிப்பு:
புதுச்சேரியில் எல்.டி.சி, ஸ்டோர் கீப்பர் நிலை-3 ஆகிய பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது 4 பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.
அதனால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மேலும் நடைபெறும் இந்த எழுத்து தேர்வு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்ல முறையில் நடைபெற பள்ளி முதல்வர்கள் உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.