இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வெளியாகும் என்ற தகவல்கள் வந்துள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டின் 2ம் கட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது?கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான தகவல்களின் படி தற்போது 3 (அ) 4% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 45% ஆக மாறும்.
தற்போதைய பணவீக்கத்திற்கு மத்தியில் அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த 3% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு மாதம் ரூ.450 கூடுதலாக கிடைக்கும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.