தமிழகத்தில் பணியாற்றக்கூடிய அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பாலிடெக்னிக் கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு சம்பந்தமாக தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை மனுக்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர் . இத்தகைய சூழ்நிலையில்
தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 7374 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயினை 25 ஆயிரம் ரூபாயாகவும் பாலிடெக்னிக் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20000 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு உயர் கல்வித் துறை செயலாளர் மாண்புமிகு கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் இணைந்து பணியாற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.