WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 10, 2023

கணக்கு அதிகாரி பணிக்கு தேர்வு அறிவிப்பு.

அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில், 52 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7; மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என, மொத்தம், 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான போட்டி தேர்வு, பிப்., 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.