WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 6, 2023

பணி வரன்முறை உத்தரவு: இயக்குனர் அறிவுரை.

'ஆசிரியர்கள் பணி வரன்முறைக்கான உத்தரவுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறை மற்றும் தகுதி காண் பருவம் முடித்தது குறித்து, சில மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்காமல், காலதாமதம் செய்வதாக புகார்கள் வருகின்றன; இது, வருந்தத்தக்க நிகழ்வு.

இந்த விஷயத்தில் மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, தகுதி காண் பருவம் முடித்தது மற்றும் பணி வரன்முறை தொடர்பான உத்தரவுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும்.

உத்தரவு வழங்க இயலாவிட்டால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.