அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர், 3,743 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்தில், 450க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், பி.இ., --- பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, தமிழக அரசு ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங்கை நடத்துகிறது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைன் வழியில் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, 2.09 லட்சம் பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர், 3,743 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், விளையாட்டு பிரிவினர், 2,112; மாற்றுத் திறனாளிகள், 408; முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், 1,223 பேர்.
இன்றும், நாளையும் நடக்கும் கவுன்சிலிங்கில், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துள்ள மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 387 பேர் பங்கேற்க உள்ளனர்.
மீதமுள்ள மாணவர்களுக்கு வரும், 25 முதல், 27ம் தேதி வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்பின், வரும், 29ம் தேதி முதல் செப்.,3 வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.