WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 15, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புவெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. எனினும், வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பணவீக்க அளவின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

முன் தேதியிட்டு: இது இப்போது அடிப்படை சம்பளத்தில் 50% ஆக உள்ளது. இந்த அகவிலைப்படி மேலும் 3% சதவீதம் உயர்த்தப்படலாம் என்றும் ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதனிடையே, இமாச்சல அரசுஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை தசரா பண்டிகைதொடங்கும் முன்பே அறிவித்துவிட்டது. இதன்மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த 1.8 லட்சம் ஊழியர்கள் 1.7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.