WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 22, 2025

அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்.

 

அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் 574 தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர்​களை நியமிப்​ப​தற்​கான ஆன்​லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்​கியது. இதை உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தொடங்​கி​வைத்​தார்.

இதுதொடர்​பாக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அரசு கலை அறி​வியல் கல்லூரி​களில் நடப்​புக் கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெற்று வகுப்​பு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

 ஏழை மாணவர்கள் அனை​வருக்​கும் சமமான உயர்​கல்வி கிடைக்க வேண்​டும் என்ற நோக்​கில் முதல்​வரின் ஆணை​யின்​படி இந்த ஆண்டு புதி​தாக 15 அரசு கலை அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு இருக்​கின்​றன. அக்​கல்​லூரி​களில் பல்​வேறு பாடப்​பிரிவுகளில் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

 இக்​கல்​லூரி​களில் நிரந்தர ஆசிரியர்​கள் பணி​யமர்த்​தப்​படும் வரை, மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க 574 கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி​யமர்த்த முதல்​வர் ஆணை​யிட்​டுள்​ளார். கவுரவ விரிவுரை​யாளர் பணி​யிடங்​களை உரிய கல்வித்தகுதி உடைய​வர்​களை கொண்டு வெளிப்​படைத் தன்​மைய​யுடன் நிரப்ப கல்​லூரி கல்வி ஆணை​யருக்கு அனு​மதி வழங்கப்​பட்​டுள்​ளது.

 

கவுரவ விரிவுரை​யாளர் பதவிக்கு www.tngasa.org என்ற இணை​யதளம் வாயி​லாக விண்​ணப்​பிக்க வேண்​டும். 34 பாடப்​பிரிவு​களுக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள 574 பணி​யிடங்​களின் விவரங்​கள் இணை​யதளத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளன. உரிய தகு​தி​யுடைய​வர்​கள் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்தை பயன்​படுத்தி ஆக.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தமிழக அரசின் நெறி​முறைகளை பின்​பற்​றி​யும் கல்​வித்​தகு​தி, நேர்​முகத் தேர்வு மதிப்​பீடு​களின் அடிப்​படை​யிலும் தெரிவு செய்​யப்​படு​வர். இவ்​வாறு அமைச்சர் கூறி​யுள்​ளார்.

தற்​காலிக கவுரவ விரிவுரை​யாளர் பணிநியமனத்​துக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவை சென்னை ராணி மேரி கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வின்​போது உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தொடங்​கி​வைத்​தார். அப்​போது கல்லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, ராணிமேரி கல்​லூரி​யின் முதல்​வர்​ உமா மகேஸ்​வரி ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.