WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 8, 2025

தமிழ்நாட்டில் இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்; வயது வரம்பை தளர்த்தி அரசாணை வெளியீடு!

 

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் இனி 40 வயது வரை சேரலாம் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையின் அதிகபடியான வயது வரம்பு 21 என்று இருந்த நிலையில், அதிகபடியான வயதை 40 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த கல்வி ஆண்டு முதலே மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் வகையில் இந்த வயது வரம்பு அறிவிப்பு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உள்ளன. இவற்றில் உள்ள இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெறப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு கல்வியை முடித்தவர்கள் உயர்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் (BA, B.Sc, B.Com, BBA) சேரலாம்

20 சதவீத கூடுதல் இடங்கள் சேர்ப்பு

2025-26 கல்வி ஆண்டில் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 7.53 லட்சம் பேர் மாநில கல்வித்திட்டத்தில் இந்தாண்டு பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவைமட்டுமின்றி, இதர பாடத்திட்டங்களும் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு தகுதிப் பெற்றனர்

ஏராளமானவர்களுக்கு இடங்கள் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் உயர்த்தப்பட்டது. அவைமட்டுமின்றி அரசு உதவி பெறும் கல்லூரியில் 15 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் 10 சதவீத இடங்களும் என சுமார் 15,000 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் புதிதாக உருவாக்கபப்ட்டன.

புதிய கல்லூரிகள் திறப்பு

மேலும், மாணவர்களின் நலன் கருதி புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் சேர்க்கை நடைபெற்றது. நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை மூலம் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு வருகிறது.

வயது வரம்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பின் சேர்க்கைக்கான அதிகபடியான வயது வரம்பு 21 ஆக இருந்ததது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 3 ஆண்டுகள் வரை தளர்வு இருந்தது. மாணவர்கள் நலன் கருதி வயது வரம்பின் உச்ச வரம்பை 40 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்று, கல்லூரி கல்வி ஆணையரின் கருத்துருவை ஆய்வு செய்து தற்போது வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025-26 கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் அதிகபடியாக 40 வயது வரை சேரலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் 5 வருடங்கள், அதாவது 45 வயது வரையும், எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு 3 ஆண்டுகள், அதாவது 43 வயது வரையும் உயர்த்தி அதிகரிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை உயர்கல்வித் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு உயர்வு


பிரிவுவயது
பொதுப்பிரிவு40
மாற்றுத்திறனாளிகள்45
எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள்43


இதனால் இந்த கல்வி ஆண்டு முதல் வயது வரம்பு காரணத்தினால் கல்லூரியை தொடர முடியாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு, உயர்கல்வியில் சேரலாம். அரசு கல்லூரிகள் ஊக்கத்தொகைகளுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.