WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 5, 2025

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 

அரசு தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் தரநிலை அறிக்​கையை பயன்​படுத்த வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின்​கீழ் நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் தரநிலை அறிக்கை அச்​சிட்டு அனைத்து மாவட்​டங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பள்​ளி​களுக்கு பிரித்து வழங்க வேண்​டும். இந்த அறிக்​கையை எவ்​வாறு பயன்​படுத்த வேண்​டும் என்​பது குறித்து வழி​காட்​டு​தல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​மாறு தலைமை ஆசிரியர்​களை அறி​வுறுத்த வேண்​டும்.

இதுத​விர, தரநிலை அறிக்​கை​யில் மாணவர்​களின் அடிப்​படை விவரங்​களை நிரப்​பி, அவரது பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை ஒட்ட வேண்​டும். ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மொத்த வேலை நாட்​கள், மாணவர் பள்​ளிக்கு வந்த நாட்​களின் எண்​ணிக்​கையை நிரப்ப வேண்​டும். திறன் அடிப்​படையி​லான பகு​தி​கள், மொழித் திறன்​கள், கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் திறன்​களில் குழந்​தை​யின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்​டும்.

இதே​போல, கல்வி இணைச் செயல்​பாடு​கள், விளை​யாட்டு பங்​கேற்​பு, குழுப்​பணி, படைப்​பாற்​றல் போன்ற பகு​தி​களில் குழந்​தை​யின் ஈடு​பாட்டை கருத்​தில் கொண்​டு, அதற்​கான தரநிலையை பதிவுசெய்ய வேண்​டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்​பு, பெற்​றோரின் கருத்​துப் பதிவு, கையொப்​பம் போன்ற பகு​தி​களும் இடம்​பெற்​றுள்​ளன. மதிப்​பெண் அட்​டையை பெற்​றதும் பெற்​றோர் தங்​கள் கருத்​துகளை எழுத ஊக்​கமளிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.