WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 29, 2025

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

 

 சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி, சென்​னை​யில் தொடர்ந்து 3-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்ட போது கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு மற்​றொரு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால், சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்​கையை இது​வரை ஏற்​க​வில்​லை. இந்​நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்கையை முன்​வைத்​து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அதைத் தொடர்ந்​து, 3-வது நாளாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர். நுழைவு வாயி​லில் அமர்ந்து ஏராள​மான ஆசிரியர்கள் தங்​கள் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார், போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை கைது செய்​தனர். அப்​போது சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்​தனர். அவர்​கள், அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர். கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்கள், சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் உள்ள 10 திருமண மண்​டபங்​களில் அடைத்து வைக்​கப்​பட்டு மாலை விடுவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், தங்​கள் கோரிக்​கையை வலி​யுறுத்​தி, போ​ராட்​டம் இன்​றும் (29-ம் தேதி) தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள்​ அறி​வித்​துள்​ளனர்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.