WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 29, 2025

பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு.

 

பொங்​கல் பண்​டிகையன்று நடை​பெற​விருந்த சிஏ தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக ஐசிஏஐ நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இந்​திய பட்​டயக் கணக்​காளர் நிறு​வனம் (ஐசிஏஐ) சார்​பில் சிஏ எனும் பட்​டயக் கணக்​காளர் பணித்​தேர்வு ஆண்​டு​தோறும் ஜனவரி, மே மற்​றும் செப்​டம்​பர் மாதங்​களில் நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வு அடிப்​படை, இடைநிலை, இறுதி என 3 நிலைகளாக நடத்​தப்​படு​கின்​றன. அதில் தேர்ச்சி பெறு​பவர்​கள் மட்​டுமே ஆடிட்​ட​ராக முடி​யும். அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான சிஏ தேர்​வு​கள் ஜனவரி​யில் நடை​பெறவுள்​ளன.

இதற்​கிடையே இடைநிலை தேர்​வில் குரூப்-2 பகு​தி​யானது ஜனவரி 15-ம் தேதி நடத்​தப்​படும் என்று முதலில் அறிவிக்​கப்​பட்​டது. அன்​றைய தினம் பொங்​கல் பண்​டிகை என்​ப​தால், சிஏ தேர்வு தேதியை மாற்ற வேண்​டுமென கோரிக்கை எழுந்​தது. இந்​நிலை​யில் ஜனவரி 15-ல் நடை​பெறு​வ​தாக இருந்த சிஏ தேர்வு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஐசிஏஐ நிறு​வனம் வெளி​யிட்ட அறி​விப்​பில், ``ம​கா​ராஷ்டிரா மாநிலத்​தில் ஜனவரி 15-ம் தேதி நகராட்​சித் தேர்​தல் நடை​பெற உள்​ளது. அதனால் அன்​றைய தினம் நடை​பெறு​வ​தாக இருந்த சிஏ தேர்​வு, நாடு முழு​வதும் ஜனவரி 19-ம் தேதி நடத்​தப்​படும். தேர்வு நேரத்​தில் எந்​த​வித மாற்​ற​மும் இல்​லை. மற்ற தேர்​வு​களும் திட்​ட​மிட்​டபடி நடை​பெறும்'' எனக் கூறப்​பட்​டுள்​ளது. ஆனால் ஐசிஏஐ அறி​விப்​பில் பொங்​கல் பண்​டிகை குறித்த தகவல் இடம்​பெறாதது தமிழர்​களிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.