தமிழகத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜன. 9, 10-ல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஜன.9, 10-ம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக உள்ள தேர்வுத் துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டே மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.