தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதனையிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18, 20-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 2024-25-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, கணிதத் திறன், கற்றல் அடைவுகள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 100 நாட்கள் சவாலுக்கு தயார் நிலையில் உள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. இம்மாதம் 3-வது வாரத்தில் 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதியும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ம் தேதியும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 5 மாணவர்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.